Sunday, April 5, 2009

ஜெ. கே. ரித்தீஷ் - சும்மா வருமா சுனாமி

என்னத்த சொல்வேனுங்கோ? ஆனந்தம், ஆச்சர்யம், ஆனால் இதெல்லாம் மெய்யாலுமே நடக்குதுங்களா? தி.மு.க வேட்பாளர் பட்டியல் ரிலிசை, 'அயன்' பட ரிலிசை வுட ஆவலா எதிர்பார்த்து இருந்தேனுங்கன்னா. பாத்தா இன்ப அதிர்ச்சிக்கு மேல இன்ப அதிர்ச்சிங்கன்னா. நம்ம 'நாயகன்', வருங்கால 'தளபதி', பாலைவனத்தில் ஏங்கி கிடந்த எங்களுக்கு கிட்டிய 'கானல் நீர்' ஜெ.கே. ரித்தீஷ் ராமநாதபுரம் தொகுதியில நிக்க போறாருங்கோ.


நம்ம மொக்கை மாயாண்டி மாமாவுக்கு ஒரு நிமஷம் மூச்சு பேச்சு இல்லீங்கோ. "மாப்பிள்ளை, நீ நெஜமாத்தான் சொல்றியானு" 'கற்றது தமிழ்' ஆனந்தி மாதிரி பத்து வாட்டி கேட்டு கான்பிர்ம் பண்ணாரு. நானும் மாயாண்டி மாமாவும் என்னைக்கு 'மினி சாந்தி' தியேட்டர்ல 'கானல் நீர்' பார்த்தோமோ, அன்னைக்கே தலைவர் ஜெ. கே. ரிதீஷோட ரத்தத்தின் ரத்தமான 'உடன்பிறப்புகள்' ஆகிட்டோம்.

நான் அந்த நியூச படிச்சதும் அப்பிடிக்கா இமாஜிநேசனுக்கு போயிட்டேன். அண்ணன் எம்.பி ஆகிட்டா பாராளுமன்றத்துல அவரோட 'கன்னிப் பேச்சு' (எவண்டா அவன் 'பன்னிப் பேச்சுனு' சொல்றது... த்தா உதைப்பட்டு சாகப்போற) எப்பிடி இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். என்னால முடியலீங்கன்னா. சபாநாயகருக்கு பிரைன் பிரீஸ் வராம இருந்த சரிதான்.

ஆனா சார் ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது. தி.மு.க கூட்டணிக்கு அவங்களோட சின்னம் மாதிரியே ரெம்ப ஒளிமயமான எதிர்காலம் இருக்குதுங்கோவ். தலைப்புக்கு எழுதுனதுக்கும் சம்பந்தமே இல்லையேன்னு தயவு செய்து கேக்காதீங்க.

அண்ணனோட நாயகன் படத்துல இருந்து ஒரு தத்துவார்த்துமுள்ள பாட்டை கேட்டு குஜால்டியா இருங்க.

ஹலோ பாஸ் எங்க அதுக்குள்ள அப்பீட் ஆகுறீங்க. அண்ணன் ஜெ.கே. ரிதிஷ நாலு வார்த்த புகழ்ந்து பின்னூட்டம் போட்டுட்டு போங்க...

2 comments:

Prakash said...

நல்லவேளை பெரியார் செத்துட்டார் . யோ கிழவா நீ வளர்த்துட்டு போன அரசியல் எப்டி இருக்குன்னு வந்து பாருயா :(

Unknown said...

Enna koduma saravana ithu?!!!
Tamil Nadu theruma?!!

Share